தமிழ்நாடு

ஜன. 1 முதல் சிப் இல்லாத ஏ.டி.எம் கார்டுகள் வேலை செய்யாது : வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல்

ஜனவரி மாதம் முதல் 'சிப்' இல்லாத ஏ.டி.எம். கார்டுகள் வேலை செய்யாது என வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் குறுந்தகவல் அனுப்பியுள்ளன

தந்தி டிவி

* ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி நடைபெறும் பண மோசடிகளை தடுக்கும் விதமாக, புதிய தொழில்நுட்பத்துடன் சிப் பொருத்திய ஏடிஎம் கார்டுகளை வங்கிகள் வழங்கி வருகின்றன.

* சிப் இல்லாத பழைய ஏ.டி.எம். கார்டுக்கு பதில் 'சிப்' பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டுகளை பெற்றுக்கொள்ளுமாறு வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் தொடர்ந்து குறுந்தகவல் மூலம் வேண்டுகோள் விடுத்து வருகின்றன.

இந்தநிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பழைய ஏடிஎம் கார்டுகள் வேலை செய்யாது என்ற தகவல் வேகமாக பரவ அதனை வங்கி அதிகாரிகள் மறுத்திருந்தனர்.

* ஆனால் தற்போது இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு குறுந்தகவல் ஒன்றை அனுப்பிவருகிறது. அதில், 'சிப் பொருத்திய புதிய ஏ.டி.எம். கார்டை வங்கியில் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பழைய கார்டுகள் வேலை செய்யாத் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இதையடுத்து ஜனவரி ஒன்று முதல் சிப் இல்லாத ஏடிஎம் கார்டுகள் வேலை செய்யாது என்பது உறுதியாகியுள்ளது.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்