டூவீலர் மோதியதில் விளையாடிக்கொண்டிருந்த 3 வயது குழந்தை பலி செங்கல்பட்டு அருகே இருங்குன்றப்பள்ளியில் வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது பெண் குழந்தை மகிழினி மீது இருசக்கர வாகனம் மோதியதில் குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. விபத்து ஏற்படுத்தியவர்களைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் செங்கல்பட்டு நீதிமன்றம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி விபத்து ஏற்படுத்தியவர்களை கைது செய்வதாக உறுதியளித்த பின் போராட்டம் கைவிடப்பட்டது. மறுநாள் பிறந்தநாள் கொண்டாடப்பட இருந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது...