தமிழ்நாடு

துரைமுருகன் வீட்டில் நடந்த சோதனை நிறைவு...

திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில், வருமானவரித்துறை மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தந்தி டிவி

வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த காந்திநகர் பகுதியில் உள்ள துரைமுருகன் வீட்டிற்கு, வருமானவரித் துறை துணை ஆணையர் விஜய் தீபன் தலைமையில் மூன்று அதிகாரிகள் நேற்றிரவு சென்றனர். இதனிடையே, அங்கு திரண்ட திமுகவினர், முறையான ஆவணங்கள் இன்றி சோதனை நடத்த வந்ததாக கூறி, வருமான வரித்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து அதிகாலை 3 மணிக்கு துரைமுருகன் வீட்டிற்குள் சென்ற தேர்தல் பறக்கும் படை மற்றும் வருமான வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். விடிய, விடிய சோதனையின் முடிவில் சில ஆவணங்களை அவர்கள் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது.

இதனிடையே துரைமுருகன் மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான பள்ளி, கல்லூரியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நீடித்து வருகிறது. ஆனால், வீட்டில் நடந்த சோதனை நிறைவடைந்து விட்டதாக, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ