தமிழ்நாடு

கண்மாயை தூர்வாரியதாக அதிகாரிகள் மோசடி - ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்ததாக பொதுமக்கள் குற்றச்சாட்டு.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் வேப்பலோடை கிராமத்தில் உள்ள கண்மாயை தூர்வார கோரி, கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டது. ஆனால் கண்மாய் ஏற்கனவே தூர்வாரப்பட்டதாக தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் பெறப்பட்டுள்ளது. வேப்பலோடை கண்மாயை தூர்வாரியதாக கணக்கு காண்பித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் 17 லட்சம் ரூபாயை மோசடி செய்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மோசடியில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், மழைக்காலம் தொடங்கும் முன் கண்மாயை தூர்வார வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்