தமிழ்நாடு

5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 5 ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இது குறித்து உள்துறை செயலாளராக எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பால் உற்பத்தியாளர் கூட்டுறவு அமைப்பின் லஞ்ச ஒழிப்பு துறையில் இருந்த சுனில் குமார் ஐ.பி.எஸ்க்கு, டி.ஜி.பி.யாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அவர், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையத்திற்கு நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொருளாதார குற்றப்பிரிவில் ஐ.பி.எஸ் அதிகாரியாக இருந்த சுனில் குமார் சிங்கிற்கு, சிறைத்துறை டி.ஜி.பியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறை அதிகாரியாக இருந்த அபாஷ்குமாருக்கு, பொருளாதார குற்றப்பிரிவில் கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார்.

சென்னை காவலர் நலவாரியத்தின் ஐ.ஜி யாக இருந்த சேஷசாயி, ஈரோடு சிறப்பு அதிரடிப்படை கூடுதல் டிஜிபியானார். மதுரை மாநகர் காவல் ஆணையர் டேவிட்சன் ஆசீர்வாதத்திற்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ