தமிழ்நாடு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு : முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்

அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் ப. சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை தள்ளுபடி செய்து, உச்சநீதிமன்ற நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வு உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் ப. சிதம்பரத்தின் மேல்முறையீடு ஏற்கப்படுவதாகவும், 2 லட்சம் ரூபாய் சொந்த ஜாமீன் தொகையாக செலுத்தவும் உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர். மேலும், நீதிமன்ற அனுமதியின்றி வெளிநாடு செல்லக் கூடாது எனவு​ம் பானுமதி அமர்வு நிபந்தனை விதித்துள்ளது. இதுதவிர, ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கு தொடர்பாக ஊடகங்களுக்கு பேட்டி அளிக்கக் கூடாது - அறிக்கை விடக்கூடாது என்றும் நீதிபதிகள் நிபந்தனை விதித்துள்ளனர். சாட்சிகளை கலைக்கவோ, மிரட்டவோ கூடாது என்றும், சாட்சிகள் மீது ஆதிக்கம் செலுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு

Drunk And Drive | மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியவர்கள்..மலைக்க வைக்கும் டேட்டா

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு