தமிழ்நாடு

இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

தந்தி டிவி

* தொடக்கக்கல்வித் துறையின் இடைநிலை ஆசிரியர்களை, சமூக நலத்துறையின் கீழ் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யூகேஜி வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்க இடைக்கால தடை விதிக்க கோரி உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

* இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன், இடைநிலை ஆசிரியர்கள் நியமனத்திற்கான தகுதிகள் என்ன? கடந்த 5 ஆண்டுகளாக எந்த தகுதியின் அடிப்படையில் இடைநிலை ஆசிரியர் நியமனம் நடைபெற்றது? எனவும் கேள்வி எழுப்பினார்.

* எத்தனை இடைநிலை ஆசிரியர்கள் இதுவரை நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தமிழக அரசிடம் உரிய தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்தி வைத்தார்.

Flight Tickets | "விமானங்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்க கூடாது" - மத்திய அரசு அதிரடி உத்தரவு

NDA || PiyushGoyal || தமிழகம் வருகிறார் பியூஷ் கோயல்.. பாஜகவுக்கு இத்தனை தொகுதிகள்?

Gold Robbery | Pudukkottai | 137 சவரன் தங்க நகைகள் கொள்ளை.. சட்டென்று இறங்கிய 3 தனிப்படைகள்

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்