தமிழ்நாடு

இன்ஸ்டாகிராம் மூலம் சிறுமியை படமெடுத்த இளைஞர் : போக்சோ சட்டத்தில் கைது

பெண் குரலில் பேசி பதினாறு வயது சிறுமியை, ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய மகேஷை, போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.

தந்தி டிவி

சென்னை அடுத்த மணலியைச் சேர்ந்த பட்டதாரி இளைஞர் மகேஷ், இன்ஸ்டாகிராம் மூலம் பெண்களிடம், பெண் குரலில் பேசி பழகி வந்துள்ளார். இந்நிலையில், சென்னையை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, நாளடைவில் நெருக்கமாக பழகியுள்ளார். இதைத் தொடர்ந்து, ஆசை வார்த்தைக் கூறி, தவறான உறவுக்கு அழைத்துள்ளார். இதனால், நட்பை துண்டித்த சிறுமியை வேறொரு போலி ஐடி மூலம் அழைத்து, கவுசல்யா என அறிமுகமாகி பேசியுள்ளார். அதோடு, பெண் குரலில் பேசி நம்ப வைத்த மகேஷ், சிறுமி குளிக்கும் காட்சியை பதிவு செய்ததாக கூறி மிரட்டியுள்ளார். பின்னர், வேறொரு இன்ஸ்டாகிராம் ஐடி மூலம் அழைத்து ஆபாச படம் குறித்து கூறி உறவுக்கு அழைத்துள்ளார். இதனால், அதிர்ச்சி அடைந்த சிறுமி, சம்பவம் குறித்து தாயாரிடம் கூறியுள்ளார். தாயார் அளித்த புகாரின் பேரில், மகேஷை, போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்