தமிழ்நாடு

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்... 2வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும்

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள், தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

தந்தி டிவி

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள், தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.தமிழகம் முழுவதும் இரண்டாம் தவணையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று தொடங்கியுள்ளது. சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் நடந்த இந்த நிகழ்வில் மருத்துவமனை முதல்வர் தேரணி ராஜன் தடுப்பூசி போட்டுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழகத்தில் இதுவரை 2 லட்சத்து 27 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாக தெரிவித்தார். விரைவில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என்றும், டெங்கு காய்ச்சல் பரவும் சூழல் உள்ளதால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு