தமிழ்நாடு

இந்தியாவில் தலைவிரித்தாடும் சீரியஸான பிரச்சினை.. கைவிரித்த ரிசர்வ் வங்கி

தந்தி டிவி

சில்லரை விலைகள் அடிப்படையிலான விலைவாசி உயர்வு

ஏப்ரலில் 4.83 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த 11 மாதங்களில் இல்லாத அளவுக்கு சில்லரை விலைவாசி உயர்வு ஏப்ரலில் குறைந்துள்ளதாக, மத்திய புள்ளியல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஜூலையில் 7.4 சதவீதமாக உச்சமடைந்த சில்லரை

விலைவாசி உயர்வு விகிதம், ஜனவரியில் 5.1 சதவீதமாக சரிந்து, மார்ச்சில் 4.9 சதவீதமாக குறைந்து ஏப்ரலில் 4.83 சதவீதமாக சரிந்துள்ளது.

ஆனால் உணவு பொருட்கள் விலைவாசி உயர்வு, மார்ச்சில் 7.7

சதவீதமாக இருந்து, ஏப்ரலில் 7.9 சதவீதமாக அதிகரித்துள்ளது.

காய்கறிகள் விலை உயர்வு 27.8 சதவீதமாகவும், பருப்பு ரகங்களின் விலை உயர்வு 16.8 சதவீதமாகவும், மாமிசம் மற்றும் மீன் விலை உயர்வு 8.2 சதவீதமாகவும் ஏப்ரலில் அதிகரித்துள்ளது.

உணவு பொருட்கள் விலை உயர்வு விகிதம் அதிக அளவில்

தொடர்வதால், சில்லரை விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் கூறியுள்ளார்.

சில்லரை விலைவாசி உயர்வு ஒடிசாவில் அதிகபட்சமாக 7.11 சதவீதமாக உள்ளது. தமிழகத்தில் 4.93 சதவீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்