தமிழ்நாடு

மறைமுக உள்ளாட்சி தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு : டிசம்பர் 19 ஆம் தேதி விசாரிக்கப்படும் என உத்தரவு

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது.

தந்தி டிவி

மறைமுக உள்ளாட்சி தேர்தலை செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கை டிசம்பர் 19 ஆம் தேதிக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை ஒத்தி வைத்துள்ளது. மறைமுகத் தேர்தல் நடத்துவது தொடர்பாக தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு சார்பில், இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதையேற்ற நீதிபதிகள் வழக்கு விசாரணையை வரும் 19 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

DMK | VCK | Thirumavalavan | அதிக தொகுதி எதிர்பார்த்த திருமா - மனம் மாறிய திமுக

N. R. Congress | BJP | NDA-வில் இருந்து விலகும் N.R.காங்கிரஸ்? - பாஜக போட்டபுதிய திட்டம்?

Parliament | "தமிழகம் முரண்பாட்டை கடைப்பிடிக்கிறது" - நாடாளுமன்றத்தில் அஸ்வினி வைஷ்ணவ் சொன்ன பதில்

TN Election2026 | ஓட்டு போட இது கட்டாயம்.. கட்டாயம்.. விதிகளை வெளியிட்டது தேர்தல் ஆணையம்

Nellai | நெல்லையை நடுங்கவிட்ட 4 எரிந்த சடலங்கள் - அடுத்தடுத்து அவிழும் பகீர் உண்மை