தமிழ்நாடு

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடு கட்டி கொடுத்த வெளிநாடு வாழ் இந்தியர்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

தந்தி டிவி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவருக்கு, ரஷ்யாவில் வசித்துவரும் வெளிநாடு வாழ் இந்தியர் புதிதாக வீடு கட்டி கொடுத்துள்ளார்.

கஜா புயல் தாக்குதலில் நாகை மாவட்டம் காமேஸ்வரம் கிராமத்தை சேர்ந்த எழிலரசி என்பவரது வீடு முற்றிலும் இடிந்து சேதமானது. இதனையடுத்து தென்னங்கீற்று முடைந்து குடும்பத்தை காப்பாற்றி வந்த எழிலரசி குடியிருக்க வீடு இல்லாமல் சிரமப்பட்டு வந்தார். இந்த நிலையில் காமேஸ்வரத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், எழிலரசிக்கு வீடு கட்டி தருவதாக உறுதி அளித்திருந்தார். அதன்படி ரஷ்யாவில் வசித்துவரும் தமிழகத்தை சேர்ந்த தனசேகரன் என்பவர் உதவியுடன் நாம் தமிழர் கட்சி சார்பில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய வீடு ஒன்று எழிலரசிக்கு கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளது.

TNSTC| இனி ஈஸியா அரசு பஸ் டிக்கெட் புக் பண்ணலாம்.. சிவப்பு, மஞ்சள் கலரில் அசத்தலாக அப்டேட்டான TNSTC

Breaking | Govt EV Bus | தனியாரை போல மாறும் அரசு பஸ்கள் | களமிறங்கும் புது டெக்னாலஜி

Senthilbalaji | "செந்தில் பாலாஜியை கைது செய்யக்கூடாது"ட்விஸ்ட் கொடுத்த உச்ச நீதிமன்றம்

Breaking | Karnataka CM | ``ரெடியா இருங்க..'' | அவசர மீட்டிங்கில் கர்நாடகா CM

Weather Report | TN Rain | இன்றும், நாளையும்..ரெடியா இருங்க சென்னை மக்களே