தமிழ்நாடு

2070க்குள் இந்தியா..? ஆளுநர் ஆர்.என்.ரவி சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

உலக தலைவர்கள் கலந்து கொண்டு ஜி 20 மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்த விளக்க கருத்தரங்கம் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை வகித்து உரையாற்றினார். உலகில் போரை விட ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் வறுமை காரணமாக ஏராளமான பெண்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்த அவர், இதுபோன்ற உலகின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது என்றார். புவி வெப்பமயமாதல் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ள நிலையில், 2070-ம் ஆண்டிற்கு கார்பன் உமிழ்வை பூஜ்ஜியமாக்கவும் இந்தியா திட்டமிட்டு, நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளதாக தெரிவித்தார். வளர்ந்த நாடாக, சுய ஆற்றல் மிக்க நாடாக மாற இளைஞர்கள் கடுமையாக உழைக்க வேண்டும் என்று ஆளுநர் கேட்டுக் கொண்டார்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்