பள்ளி மாணவர்களின் சத்துணவுத் திட்டத்திற்கான நிதி உயர்த்தப்பட்டுள்ளது. இதுதொடர்பான அரசாணையை சமூக நலத்துறை முதன்மை செயலாளர் மதுமதி வெளியிட்டுள்ளார். சத்துணவுத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் காய்கறிகள், சமையல் எரிவாயு, ஆகியவற்றிற்கான உணவூட்டும் செலவினை ஆண்டுக்கு 48 கோடி ரூபாய் அளவிற்கு உயர்த்தி இருப்பதாக, அதில் தெரிவித்துள்ளார்.