தமிழ்நாடு

சென்னையில் உயர்ந்து வரும் நிலத்தடி நீர்மட்டம் - 2.5 அடி முதல் 10 அடி வரை உயர்வு

வடகிழக்கு பருவமழை தொடங்கிய பின்னர் சென்னையில் நிலத்தடி நீர்மட்டம் 10 அடி வரை உயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அது குறித்த தகவல்களைப் பார்க்கலாம்.

தந்தி டிவி

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, சென்னையில் கடந்த 28 ஆம் தேதி முதல் கன மழை கொட்டி வருகிறது. அதன் காரணமாக சென்னையின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் 2.5 அடி முதல் 10 அடி வரை உயர்ந்துள்ளது. செப்டம்பர் மாதம் மாதவரம் பகுதியில் 20.7 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 14 அடியாக உயர்ந்துள்ளது. ராயபுரம் பகுதியில் 23.7 அடி இருந்த நீர்மட்டம் தற்போது 21.2 அடியில் நீர் கிடைக்கிறது. வளசரவாக்கத்தில் 21.2 அடியில் இருந்த நீர்மட்டம் தற்போது 7.2 அடி வரை உயர்ந்து 15.4 அடியில் உள்ளது.அண்ணாநகரில் 19 அடியில் இருந்த நிலத்தடி நீர்மட்டம் தற்போது 13.4 அடியாக உயர்ந்துள்ளது.அடையாறு, சோழிங்கநல்லூர், அம்பத்தூர் பகுதிகளிலும் நிலத்தடி நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு