தமிழ்நாடு

செம்மர கடத்தல் கும்பல் துரத்தியதால் சம்பவம் - கிணற்றில் விழுந்த விவசாயி பலி

செம்மர கடத்தல் கும்பல் துரத்தியதால் சம்பவம் - கிணற்றில் விழுந்த விவசாயி பலி

தந்தி டிவி

செம்மர கடத்தல் கும்பல் துரத்தியதால் சம்பவம் - கிணற்றில் விழுந்த விவசாயி பலி

சேலத்தில் செம்மர கடத்தல் கும்பல் துரத்திய போது கிணற்றில் விழுந்த விவசாயி பலியானார்.கள்ளக்குறிச்சி மாவட்டம் எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. விவசாயியான இவருக்கு செம்மரக்கட்டை கடத்தும் கும்பலுடன் தொடர்பு இருந்ததாக கூறப்படுகிறது. செம்மரக்கட்டை கடத்தியதால் வந்த பணத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அதே கிராமத்தை சேர்ந்த சிலருடன் முன்விரோதமும் இருந்துள்ளது. இதனிடையே சேலம் அருகே உள்ள கருமந்துறைக்கு வந்திருந்த ராஜாவை அவரின் எதிர்தரப்பு கும்பல் காரில் கடத்திச் சென்றது. அப்போது தப்பிச் செல்ல முயன்ற அவரை அந்த கும்பல் விடாமல் துரத்திச் சென்றுள்ளனர். தப்பி ஓடிய ராஜா, அந்த பகுதியில் உள்ள கிணற்றில் விழுந்ததில் உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் கடத்தல் கும்பலை சேர்ந்த சீனிவாசன், கணேசன், தர்மன், செல்வம் உள்ளிட்டோரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்