தமிழ்நாடு

சிறு விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் : திட்டத்தை செயல்படுத்த 13 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

தந்தி டிவி

விவசாயிகளுக்கு மத்திய அரசு அறிவித்த ஊக்கத்தொகை திட்டத்தை செயல்படுத்த மற்றும் கண்காணிக்க மூத்த ஐ ஏ எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மத்திய இடைக்கால நிதிநிலை அறிக்கையில். சிறு குறு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் வகையில், 5 ஏக்கர் நிலத்திற்கு குறைவாக நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் வங்கிக்கணக்கில் 6 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் வருவாய் நிர்வாக ஆணையர் சத்யகோபால், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் 13 ஐஏஎஸ் அதிகாரிகளை தமிழக அரசு நியமித்துள்ளது. தமிழகத்தில் இத்திட்டத்தினை செயல்படுத்துவதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி