தமிழ்நாடு

வெறும் 14 நிமிடங்களில்..வந்தே பாரத்தில் நிகழ்ந்த அதிசயம்... என்ன ஸ்பீடு..!

தந்தி டிவி

தூய்மை இந்தியா திட்டத்தின் 9-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், நாடு முழுவதும் தூய்மை இயக்கம் நடத்தப்பட்டது. அதன் ஒரு பகுதியாக, சென்னை சென்ட்ரலிலும், எழும்பூரிலும் வந்தே பாரத் ரயில்களில் தூய்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டன. வழக்கமாக, ஒரு மணி நேரம் தூய்மைப் பணிகள் நடைபெறும் நிலையில், சோதனை முறையில் 14 நிமிடங்களில் ஒட்டு மொத்த ரயிலும் சுத்தம் செய்யப்பட்டது. எழும்பூரில் பணிகளை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா, மற்ற நாட்களில் பணியாற்றும் ஊழியர்களை வைத்தே 14 நிமிடங்களில் வந்தே பாரத் ரயிலை சுத்தம் செய்ததாக கூறினார். இதேபோன்று மற்ற ரயில்களிலும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"