தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடியில் காசநோய் பரிசோதனை மையத்தை திறந்து வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான 1,021 மருத்துவர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறிய அமைச்சர், நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை