தமிழ்நாடு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள்... அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன முக்கிய தகவல்

தந்தி டிவி

தமிழகத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள காலிப்பணியிடங்கள், நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார். தூத்துக்குடியில் காசநோய் பரிசோதனை மையத்தை திறந்து வைத்த அமைச்சர், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு தேவையான 1,021 மருத்துவர்கள், 1,066 சுகாதார ஆய்வாளர்களுக்கான நேர்முகத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். கொரோனா காலத்தில் தொடரப்பட்ட வழக்கு காரணமாக பணி நியமனம் செய்வதில் தாமதம் ஏற்படுவதாக கூறிய அமைச்சர், நீதிமன்ற உத்தரவு வந்தவுடன் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என தெரிவித்தார்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை