தமிழ்நாடு

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே மடத்தூரில் சேவல் சண்டை நடைபெறுவதாக பாவூர்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாரை கண்டதும், சேவல் சண்டையில் ஈடுபட்ட பலர் சிதறி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார், 10 பேரைப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, மத்தளம்பாறை, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள், 4 சண்டை கோழிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 10 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை