தமிழ்நாடு

சேவல் சண்டை சூதாட்டம் - 10 போ கைது...

10 இருசக்கர வாகனம், 4 கோழிகள் பறிமுதல்.

தந்தி டிவி
நெல்லை மாவட்டம் தென்காசி அருகே மடத்தூரில் சேவல் சண்டை நடைபெறுவதாக பாவூர்சத்திரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸாரை கண்டதும், சேவல் சண்டையில் ஈடுபட்ட பலர் சிதறி ஓடினர். அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார், 10 பேரைப் பிடித்தனர். விசாரணையில் அவர்கள் பாவூர்சத்திரம், குறும்பலாப்பேரி, மத்தளம்பாறை, கீழப்பாவூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, அவர்களிடம் இருந்து 10 மோட்டார் சைக்கிள்கள், 4 சண்டை கோழிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட 10 பேரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி