தமிழ்நாடு

பத்திரப்பதிவு துறை ஐஜி மனைவியிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பத்திரப் பதிவுத் துறையின் ஐ.ஜி.யாக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி குமரகுரு. இவரது மனைவி அனுராதா, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கடந்த 8-ஆம் தேதி காலை செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செல்போனை பறித்துச் சென்ற மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ