தமிழ்நாடு

பத்திரப்பதிவு துறை ஐஜி மனைவியிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பத்திரப் பதிவுத் துறையின் ஐ.ஜி.யாக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி குமரகுரு. இவரது மனைவி அனுராதா, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கடந்த 8-ஆம் தேதி காலை செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செல்போனை பறித்துச் சென்ற மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்