தமிழ்நாடு

பத்திரப்பதிவு துறை ஐஜி மனைவியிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பத்திரப் பதிவுத் துறையின் ஐ.ஜி.யாக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி குமரகுரு. இவரது மனைவி அனுராதா, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கடந்த 8-ஆம் தேதி காலை செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செல்போனை பறித்துச் சென்ற மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?