தமிழ்நாடு

பத்திரப்பதிவு துறை ஐஜி மனைவியிடம் செல்போன் பறிப்பு

சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர்.

தந்தி டிவி
சென்னையில் பத்திரப்பதிவு துறை ஐ.ஜி.யின் மனைவியிடம் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையனை போலீசார் கைது செய்தனர். பத்திரப் பதிவுத் துறையின் ஐ.ஜி.யாக இருப்பவர் ஐ.ஏ.எஸ். அதிகாரி குமரகுரு. இவரது மனைவி அனுராதா, கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டின் முன்பு கடந்த 8-ஆம் தேதி காலை செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர் செல்போனை பறித்துச் சென்றுள்ளார். இது தொடர்பாக டிபி சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசார் செல்போனை பறித்துச் சென்ற மணிகண்டன் என்ற இளைஞரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 4 செல்போன்கள், இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி