காவிரி படுகையை அகழாய்வு செய்தால் சோழர்கள் வீர வரலாறு வெளிவரும் காவிரி படுகையில் சோழர்கள் குறித்த வரலாற்று ஆய்வுகளை மேற்கொள்ள முறையான அகழாய்வுகள் நடத்தப்பட வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்துள்ளார். தஞ்சாவூரில் பேசிய அவர், கீழடி அகழாய்வு அறிக்கை வெளியிடப்பட்டால்தான் அதுகுறித்த விமர்சனங்களும், மேலும் பல ஆய்வுகளும் நடைபெறும் என்றார். காவிரி படுகையின் மண் அடுக்குகளுக்குள் பல வரலாற்று ஆதாரங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.