தமிழ்நாடு

1300 ஆண்டு பழமையான கோவில் சிலை திருட்டு - கோவில் செயல் அலுவலருக்கு போலீஸ் காவல்

1300 ஆண்டு பழமையான கோவிலில், ஐம்பொன் சிலை திருடுபோன வழக்கில், செயல் அலுவலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தந்தி டிவி
திருச்சி மாவட்டத்தில் உள்ள 1300 ஆண்டு பழமையான திருப்பராய்த்துறை தாருகாவனேஸ்வரர் கோவிலில், ஐம்பொன்னாலான அங்காளம்மன் சிலை திருடு போனது. இது தொடர்பாக, பொன் மாணிக்கவேல் தலைமையிலான தனிப்படை போலீசார் தொடர்ந்த வழக்கில், கோவிலின் செயல் அலுவலர் ஆனந்தகுமார் ராவ் கைது செய்யப்பட்டார். அவரை 19ம் தேதி வரை சிறையில் அடைக்க கும்பகோணம் நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி கோரப்பட்டது. அதன்படி, ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. இதையடுத்து, நேற்று மாலை அவரை போலீசார், ரகசிய இடத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்