தமிழ்நாடு

சிலை கடத்தல் விவகாரம் : தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா, கிரண்ராவை தேடும் தனிப்படை

சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய தொழிலதிபர்கள் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவை, தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

தந்தி டிவி

சென்னையைச் சேர்ந்த அந்த இருவரின் வீடுகளில் இருந்து நூற்றுக்கணக்கான சிலைகளை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர். அவர்கள் இருவரும் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க அனைத்து விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ரன்வீர்ஷா, கிரண்ராவ் இருவரையும் கைது செய்வதற்காக ஏ.டி.எஸ்.பி. தலைமையிலான குழு ஒன்றை, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் நியமித்துள்ளார்.

இந்த தனிப்படை, மும்பை உள்ளிட்ட இடங்களுக்கு விரைந்துள்ளது. இதனிடையே பெண் தொழிலதிபர் கிரண் ராவின் ஈ.சி.ஆர். பங்களாவிலிருந்து பல சிலைகளை அப்புறப்படுத்தி வேறு இடங்களில் மறைத்து வைத்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதை தேடும் பணியிலும் சிலை கடத்தல் தடுப்பு போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்