தமிழ்நாடு

அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரி மனு - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உத்தரவு

சிலை கடத்தல் வழக்கில் கைதான அமெரிக்க வாழ் இந்தியர் ஜாமீன் கோரிய வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான சிலைகளை கடத்தி, அதை வெளிநாடுகளில் சுபாஷ் சந்திர கபூர் விற்பனை செய்து வந்தார். இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுத்த போலீசார், கடந்த 2011 ஆம் ஆண்டு அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். சுமார் எட்டு ஆண்டுகளாக சிறையில் உள்ள சுபாஷ் சந்திர கபூர், ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் கைதான 14 பேரில், தன்னை தவிர அனைவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டதை மனுவில் அந்த நபர் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி பாரதிதாசன், அக்டோபர் 7ஆம் தேதிக்குள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணை தள்ளி வைத்தார்.

Vijayabaskar | ``மதிக்காத இடத்தில்..’’ - நெருங்கும் கிளைமேக்ஸ்.. விஜயபாஸ்கர் ராஜினாமாவா?

High Court | TN Govt | Bus | தனியார் பேருந்து கட்டண விவகாரம்.. தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்