திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இருளர் இன மக்களுக்காக கட்டப்பட்ட குடியிருப்புகள் சேதமடைந்து வருவதாக மக்கள் வேதனை தெரிவித்தனர். தொடர் மழையால் வீடுகளின் சுவர் மற்றும் மேற்கூரை இடிந்து விழும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், “வாழ்வதற்கே பயமாக இருக்கு” என அச்சத்துடன் குடியிருப்பு வாசிகள் தெரிவித்தனர்.