தமிழ்நாடு

வாரம் ஒருமுறை வீட்டுக்கு வரும் கணவன்... கண்ணை மறைத்து மனைவி ஆடிய ஆட்டம்... கடைசியில் பறிபோன உயிர்

தந்தி டிவி

வாரம் ஒருமுறை மட்டுமே வீட்டுக்கு வரும் கணவன்... கண்ணை மறைத்து மனைவி ஆடிய ஆட்டம்... கடைசியில் பறிபோன உயிர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த நபரை மனைவியுடன் தொடர்பில் இருந்த நபர் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

பென்னாகரம் அடுத்த சமத்துவபுரம் கிராமத்தை சேர்ந்த வேலன், பெங்களூருவில் சென்டிரிங் வேலை பார்த்து வந்துள்ளார். வாரத்திற்கு ஒரு முறை சொந்த ஊருக்கு வந்து செல்லும் நிலையில், அசோக்குமாரின் மனைவி சுகன்யாவும், அதே பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சத்யமூர்த்தியும் தகாத உறவில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை வேலன் கண்டித்ததால், கணவன் - மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த சூழலில், தீபாவளி கொண்டாட மனைவியின் சொந்த ஊரான பிக்கன அள்ளிக்கு வேலன் சென்றுள்ளார். அப்போது அவரை பின் தொடர்ந்து சென்ற சத்யமூர்த்தி, தனியாக பேச வேண்டும் என வரவழைத்து கத்தியால் கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், சத்யமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை