தமிழ்நாடு

விபரீதத்தில் முடிந்த குடும்ப சண்டை : மனைவியின் தலையை துண்டாக வெட்டிய கணவன்

திருவெறும்பூர் அருகே குடும்ப சண்டையில் மனைவியின் தலையை கணவன் துண்டாக வெட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி

திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியை சேர்ந்த சங்கர் சகாயராஜ் என்பவருக்கும், தஞ்சைமாவட்டம் கீழ திருப்பந்துருத்தியை சேர்ந்த ஜெஸ்சிந்தா ஜோஸ்பினுக்கும் கடந்த 9 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது.

இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப சண்டை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்தவாரம் நடந்த குடும்ப பிரச்சினையில் கோபித்துக்கொண்டு தனது அப்பா வீட்டுக்கு சென்ற ஜெஸ்சிந்தா ஜோஸ்பின், இரு தினங்களுக்கு முன்பு வீட்டுக்கு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று இரவு நடந்த குடும்ப சண்டையில், , ஜெஸ்சிந்தா ஜோஸ்பின் தலையை துண்டாக வெட்டிய சங்கர் சகாயராஜ், பின்னர் இரவு முழுவதும் மனைவியின் உடல் அருகிலேயே படுத்து தூங்கியுள்ளார்.

இதனையடுத்து காலையில் வீட்டை விட்டு வெளியே வந்த சங்கர் சகாயராஜின் உடலில் இருந்த ரத்த கரையை பார்த்த அக்கம் பக்கத்தினர் வீட்டின் உள்ளே சென்று பார்த்துள்ளனர்.

அங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் ஜெஸ்சிந்தா ஜோஸ்பின் பிணமாக கிடந்துள்ளார். பின்னர் இது குறித்து தகவல் அறிந்த போலீசார், சங்கர் சகாயராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக சங்கர் சகாயராஜின் தங்கை ஆரோக்கிய சுபாவையும் போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி