தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த காதல் கணவன் : துக்கம் தாளாமல் மனைவி தற்கொலை

தாம்பரம் அடுத்த ஒரகடம் அருகே கணவன் உயிரிழந்த துக்கத்தில், காதல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது 22 வயது மகன் பாலாஜி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற அவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். ஓராண்டுக்கு முன் ரசிதா என்ற 20வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில் கணவனின் இறப்பை தாங்கமுடியாமல் அவரது மனைவி அழுதுகொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் துக்கம் தாங்க முடியாத பாலாஜியின் மனைவி ரசிதா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை