தமிழ்நாடு

விபத்தில் உயிரிழந்த காதல் கணவன் : துக்கம் தாளாமல் மனைவி தற்கொலை

தாம்பரம் அடுத்த ஒரகடம் அருகே கணவன் உயிரிழந்த துக்கத்தில், காதல் மனைவி தற்கொலை செய்த சம்பவம் உறவினர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தந்தி டிவி
காஞ்சிபுரம் மாவட்டம் செரப்பணஞ்சேரி அண்ணா நகரைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரது 22 வயது மகன் பாலாஜி ஒரகடத்தில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்தார். இருசக்கர வாகனத்தில் வெளியே சென்ற அவர் லாரி மோதிய விபத்தில் உயிரிழந்தார். ஓராண்டுக்கு முன் ரசிதா என்ற 20வயது பெண்ணை காதலித்து திருமணம் செய்த நிலையில் கணவனின் இறப்பை தாங்கமுடியாமல் அவரது மனைவி அழுதுகொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில் துக்கம் தாங்க முடியாத பாலாஜியின் மனைவி ரசிதா வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். கணவர் இறந்த துக்கம் தாளாமல் காதல் மனைவி தற்கொலையான சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

Election Results 2026 | நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை - தமிழகம் முழுவதும் இறங்கிய காவல்துறை

Reelection திடீர்திருப்பமாக மேற்கு வங்கத்தில் மீண்டும் வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு