தமிழ்நாடு

மனைவி கதவை திறக்காததால் கணவன் தற்கொலை...

சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

தந்தி டிவி

சென்னை அண்ணாசாலை ரசா ஹைதர் தெருவைச் சேர்ந்தவர் முஸ்தாக் பாட்ஷா மற்றும் நவீஷா பானுவுக்கு திருமணமாகி 9 ஆண்டுகள் ஆன நிலையில், பாட்ஷா வேலைக்கு செல்லாமல் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. இது பற்றி நவீஷா பானு அண்ணாசாலை மகளிர் காவல் நிலையத்தில் 23-ம் தேதி புகார் கொடுத்ததுடன், லத்துராம் தெருவில் உள்ள தந்தையுடன் சென்று வசித்து வருகிறார். நேற்று முஸ்தாக் பாட்ஷா மனைவியை பார்க்க சென்ற , மனைவி நவிஷா பானு கதவையே திறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து பாட்ஷா, அங்கேயே உடலில், மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்து கொண்டுள்ளார். 94 சதவீத தீக்காயங்களுடன் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாட்ஷா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்