தமிழ்நாடு

குடித்து விட்டு தொந்தரவு - கணவன் அடித்துக் கொலை

திருத்தணி அருகே கணவனை அடித்துக் கொலை செய்த மனைவி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தந்தி டிவி
திருத்தணி அருகே நொச்சிலி கிராமத்தைச் சேர்ந்த முருகேசனின் மனைவி முனியம்மாள். முருகேசன், அடிக்கடி குடித்துவிட்டு முனியம்மாளுடன் சண்டை போட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்றும் முருகேசன் முனியம்மாளை அடித்ததாகத் தெரிகிறது. இதையறிந்த முனியம்மாளின் சகோதரர் ஏழுமலை, அண்ணி ஷீபா ஆகியோர் கொல்லாலகுப்பம் கிராமத்தில் இருந்து வந்துள்ளனர். பின்னர், 3 பேரும் சேர்ந்து முருகேசனை தாக்கியதில் அவர் உயிரிழந்தார். தகவல் அறிந்து வந்த பொதட்டூர்பேட்டை போலீஸார், முனியம்மாள் உட்பட 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை