தமிழ்நாடு

சேர்ந்து வாழ மறுத்த காதல் மனைவி - கணவன் தற்கொலை

தந்தி டிவி
• சென்னை, ஆவடி அருகே காதல் மனைவி சேர்ந்து வாழ மறுத்த நிலையில், கணவன் பாலத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காமராஜர் நகர் 3 வது தெருவில் வசித்து வருபவர் ரூபி. இவரது மகன் தீனதயாளன், பட்டாபிராம் பகுதியை சேர்ந்த லாஜியா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், லாஜியா, தீனதயாளனுடன் வாழ மறுத்து, தன் தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு சமாதானம் செய்ய சென்ற தீனதயாளனை, லாஜியா உதாசீனம் செய்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த தீனதயாளன், மனைவி லாஜியாவின் கண்முன்னே, அருகில் இருந்த பாலத்தின் மீதிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயத்துடன் மீட்கப்பட்ட அவர், ராஜீவ்காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

EPS | Erode | ``அவங்க கூட்டணில புகைய ஆரம்பித்துவிட்டது..'' | கூட்டத்தை நோக்கி கேட்ட ஈபிஎஸ்

Breaking | CM Stalin | "ரத்து செய்ய வேண்டும்.." | பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்

Breaking | India | Pakistan | T20 | இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்கவில்லை

T20 World Cup | India vs Pakistan இன்று பலப்பரீட்சை - கொழும்பு மைதானத்தை அதிரவிட்ட ரசிகர்கள்

Voter List | ``23ம் தேதி’’ - அறிவிப்பை வெளியிட்டார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி