தமிழ்நாடு

100 நாள் வேலை திட்டம்: மாற்றுத்திறனாளிகளுக்கு சம்பளம் வழங்காதது ஏன்?- அரசுக்கு மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நூறு நாள் வேலை திட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு 6 மாதம் சம்பளம் வழங்காதது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தந்தி டிவி
பத்திரிகை செய்தி அடிப்படையில், தாமாக முன்வந்து, மாநில மனித உரிமை ஆணையம் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது. ஆணைய உறுப்பினர் துரை ஜெயச்சந்திரன், தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், 100 நாள் வேலையில் கிடைக்கும் கூலியை மட்டுமே 500க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதாரமாக கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய சூழலில், கடந்த ஆறு மாதமாக அவர்களுக்கு சம்பளம் வழங்காதது ஏன் என அதில் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக 4 வாரங்களில் தமிழக ஊரக வளர்ச்சித்துறை கூடுதல் செயலாளர், இயக்குனர் அறிக்கை அளிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்