தமிழ்நாடு

செல்போன் மூலம் ஆலோசனை பெற்று பிரசவம் பார்த்த செவிலியர்கள் - மாநில மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு

செல்போன் மூலம் ஆலோசனை பெற்று செவிலியர்கள் பிரசவம் பார்த்தது குறித்த தினத்தந்தி நாளிதழ் செய்தி எதிரொலியாக, 4 வாரத்தில் விரிவான அறிக்கை அளிக்குமாறு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தந்தி டிவி

இம்ரான் என்பவரது மனைவி பரீதாவுக்கு ஜனவரி 21ஆம் தேதி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், சிலமணி நேரத்தில் தாய் உயிரிழந்ததால் உறவினர்கள் போராட்டம் நடத்தினர். இதுகுறித்து தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. இதேபோல், ரேவதி என்ற ஆசிரியைக்கு நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப்போக்கு ஏற்பட்டு உயிரிழந்தார். இந்தச் செய்திகளின் அடிப்படையில், தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் 4 வாரத்தில் தனித் தனியாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

TN Election Result | ECI | வாக்கு எண்ணிக்கை நாள்இன்றே முழுவிவரங்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"