தமிழ்நாடு

சுவாமி சிலை செய்ய கொண்டு செல்லப்பட்ட பிரமாண்ட பாறை...

பெங்களூரு ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில், ஒரே கல்லில் 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
பெங்களூரு ஸ்ரீகோதண்டராம சுவாமி தேவஸ்தான அறக்கட்டளை சார்பில், ஒரே கல்லில் 64 அடி உயரத்தில், 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட விஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. சுவாமி சிலை, 7 தலை கொண்ட ஆதிசேஷன் சிலை மற்றும் பீடத்துடன் சேர்த்து சிலையை மொத்தம் 108 அடி உயரத்தில் அமைக்க உள்ளனர். இதற்காக 2 கல் பாறையை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே உள்ள கொரக்கோட்டை பாறை குன்றில் இருந்து எடுத்துச் சென்றனர். சுமார் 230 டன் எடை கொண்ட கல்பா​றையை லாரியில் எடுத்துச் சென்றபோது, மணலில் லாரியின் டயர் புகுந்ததால், அதை சரி செய்யும் பணி நடைபெறுகிறது. பெங்களூருவுக்கு பாறையை கொண்டு செல்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு