ஒசூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணன் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் எதிரொலியாக, ஒசூர் நீதிமன்றத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ஏ.டி.எஸ்.பி சங்கர் தலைமையிலான போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். நீதிமன்றத்திற்கு வருகை தரும் அனைவரும் தீவிர சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள். நீதிமன்றத்திற்குள் வரும் வாகனங்கள், மக்கள் கொண்டு வரும் கைப்பைகளில் போலீசார் சோதனை செய்கின்றனர். நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர் கண்ணனை அரிவாளால் வெட்டிய ஆனந்த்குமார், அதற்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி சத்யவதி ஏற்கனவே போலீசார் கைது செய்துள்ளனர்.