தமிழ்நாடு

"விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர்" - பூச்சி மருந்து குடித்து பெண் தற்கொலை முயற்சி

ஒசூர் அருகே விசாரணை என்ற பெயரில் போலீசார் டார்ச்சர் செய்வதாக கூறி பெண் ஒருவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

தந்தி டிவி

ஒசூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மனைவி மரகதம். இவர்களுக்கு 3 பிள்ளைகள் உள்ளனர். ராதாகிருஷ்ணன் மேல் கொலை உள்ளிட்ட பல வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் அவரை போலீசார் அடிக்கடி விசாரணை என்ற பெயரில் அழைத்து சென்றுள்ளனர். மேலும் சமீபத்தில் திமுக நிர்வாகி கொலை வழக்கிலும் ராதாகிருஷ்ணனை விசாரிக்க சென்ற நிலையில் அவர் தலைமறைவானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவரின் மனைவி மரகதம் மற்றும் மகனை போலீசார் அடிக்கடி விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளனர் . இதனால் விரக்தி அடைந்த மரகதம், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி