தமிழ்நாடு

ஒசூர் வாகன ஓட்டுனர், கிளீனர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் மீது சரமாரி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் அனைக்கல் பகுதியை சேர்நத் ஜெகதீஷ் என்ற லாரி ஓட்டுநர் தமது, கிளினருடன், அத்திப்பள்ளி சுங்கச்சாவடியை கடந்துள்ளார். அப்போது பாஸ்டேக், மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்கள், ரொக்க பணமாக செலுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், வாகன ஓட்டுனர் ஜெகதீஷ் மற்றும் கிளீனர் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி, சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேரை கைது செய்தனர்.

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்