தமிழ்நாடு

ஒசூர் வாகன ஓட்டுனர், கிளீனர் மீது தாக்குதல் - சிசிடிவி காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சுங்கச்சாவடியில் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறில் வாகன ஓட்டுனர் மற்றும் கிளீனர் மீது சரமாரி தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.

தந்தி டிவி

கர்நாடக மாநிலம் அனைக்கல் பகுதியை சேர்நத் ஜெகதீஷ் என்ற லாரி ஓட்டுநர் தமது, கிளினருடன், அத்திப்பள்ளி சுங்கச்சாவடியை கடந்துள்ளார். அப்போது பாஸ்டேக், மூலம் கட்டணம் செலுத்தும் நடைமுறையில் சிக்கல் ஏற்பட்டதால் சுங்கச்சாவடி ஊழியர்கள், ரொக்க பணமாக செலுத்துமாறு கூறியுள்ளனர். ஆனால் இதற்கு மறுப்பு தெரிவித்ததால், வாகன ஓட்டுனர் ஜெகதீஷ் மற்றும் கிளீனர் மீது, சுங்கச்சாவடி ஊழியர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் புகாரின் பேரில், வழக்கு பதிவு செய்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி, சுங்கச்சாவடி ஊழியர்கள் 6 பேரை கைது செய்தனர்.

BREAKING || "கனத்த இதயத்துடன்" - அரசியலில் புயலை கிளப்பிய சி.விஜயபாஸ்கர் அறிக்கை

BREAKING ||நண்பர் நெதன்யாகுக்கு ஷாக் கொடுத்த டிரம்ப் - அப்படி என்னதான் சொன்னார்?

BREAKING || திருச்செந்தூர் கோயில் தரப்பு முக்கிய அறிவிப்பு

ADMK | TVK | அதிமுகவிலிருந்து தவெகவில் இணைந்த நால்வர் - நாளை சபாநாயகரிடம் விளக்கம்

Court | TN Police | "ஆகாஷ் உடலை வாங்க மறுத்தால்.. இன்றே மேல் நடவடிக்கை.." கோர்ட் அதிரடி