தமிழ்நாடு

உயர்கல்வி தொடர முடியாமல் குழந்தைத் தொழிலாளராகும் பெண் பிள்ளைகள்

ஒசூர் அருகே உயர்கல்வி படிக்கும் வசதியில்லாததால், மாணவிகள் குழந்தை தொழிலாளராகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

தந்தி டிவி

* ஒசூர் அருகே உயர்கல்வி படிக்கும் வசதியில்லாததால், மாணவிகள் குழந்தை தொழிலாளராகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

* அங்குள்ள தொளுவபெட்டா கிராமத்தில் குடிநீர், சாலை, சுகாதாரம், பேருந்து உள்ளிட்ட எந்த வசதியும் இல்லை எனக் கூறப்படுகிறது. இன்னும் கொடுமை என்னவென்றால், நடுநிலைப்பள்ளியில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள், போதிய வசதி இல்லாததால் குழந்தை தொழிலாளராக மாறும் நிலை உள்ளது.

* ஈரோடு, கோவை உள்ள நூற்பாலைகளுக்கு பெண் பிள்ளைகளை பெற்றோர்கள் வேலைக்கு அனுப்பி வைக்கின்றனர். இல்லையென்றால், அறியாத வயதிலேயே பெண் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைக்கின்றனர்.

* இதனால் பெண் குழந்தைகள் உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுகின்றனர். இந்தநிலை மாற அரசு உதவ வேண்டும் என்பதே தொளுவபெட்டா கிராம பெண் குழந்தைகளின் வேண்டுகோளாகும்.

BREAKING ||நேருக்கு நேர் மோதிப்பார்ப்போம்-முதல்வர் தொகுதியிலேயே எதிர்த்து நிற்கும் எதிர்கட்சி தலைவர்

Senthil Balaji | Karur Stampede | 5 மணி நேரத்திற்கு மேல் சிபிஐ விசாரணை - செந்தில்பாலாஜி வாக்குமூலம்?

Thiruparankundram Issue | Madras Highcourt Madurai Bench | திருப்பரங்குன்றம் விவகாரம்- கோர்ட் அதிரடி

Breaking | CV Shanmugam | நயன்தாரா குறித்து.. CVS சர்ச்சை பேச்சு - நடிகர் சங்கம் பரபரப்பு அறிக்கை

BREAKING || பதில் சொல்லிய விஜய்... அதே இடத்தில் செந்தில்பாலாஜி... 5 மணிநேரம் விசாரணை