Hosur | Poorvika Appliances | ஓசூரில் பூர்விகா அப்ளையன்ஸ் 50-வது கிளை திறப்பு
ஓசூரில் பூர்விகா அப்ளையன்ஸ் 50-வது கிளை திறப்பு ஓசூர் ராம் நகர் ஏரி தெருவில் பூர்விகா அப்ளையன்ஸ் நிறுவனத்தின் 50-வது கிளை திறக்கப்பட்டது. நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி யுவராஜ் நடராஜன் உள்ளிட்டோர் கிளையை திறந்து வைத்து, சிறப்பு பூஜைகளுடன் முதல் விற்பனையை தொடங்கி வைத்தனர். புதிய கிளையில் மொபைல், மடிக்கணினி, ஏசி, குளிர்சாதனப் பெட்டி, துணி துவைக்கும் இயந்திரம் உள்ளிட்ட பொருட்களுக்கு சிறப்பு தள்ளுபடி மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டன. முதல் நாளிலேயே பொருட்களை வாங்க ஏராளமான வாடிக்கையாளர்கள் குடும்பத்துடன் குவிந்தனர்.