தமிழ்நாடு

கன்னட கொடியை தமிழக போலீசார் அகற்ற சொன்னதாக புகார் - கன்னட அமைப்பினர் நூதன போராட்டம்

ஒசூர் அருகே தமிழக வாகன ஓட்டிகளுக்கு ரோஜா மலர்களை கொடுத்ததோடு தடியும் காட்டி கன்னட அமைப்பினர் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி

கடந்த சில நாட்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி சுங்கச்சாவடியில் கன்னட கொடிகளுடன் சென்ற கர்நாடக மாநில வாகனங்களை தடுத்து நிறுத்திய போலீசார், கொடியை அகற்ற சொன்னதாக கூறப்படுகிறது. இதற்கு தெரிவித்த அவர்கள் போராட்டம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் கன்னட அமைப்பினர் கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் போராட்டத்தை நடத்தினர். தமிழக பதிவெண் கொண்ட வாகனங்களில் வந்தவர்களுக்கு ரோஜாப்பூக்களை கொடுத்த அவர்கள், கையில் இருந்த தடியையும் காட்டினர். இந்த போராட்டத்தால் மாநில எல்லைப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்