தமிழ்நாடு

மலை மாதேஷ்வரா கோயிலில் திருவிழா : ராட்சத தேனீக்கள் கொட்டியதில், 60 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அருளாளம் கிராமத்தில் உள்ள மலை மாதேஷ்வரா கோயிலில் ஊர்த்திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அருளாளம் கிராமத்தில் உள்ள மலை மாதேஷ்வரா கோயிலில் ஊர்த்திருவிழா நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட கிராமத்தினர், கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எழுந்த புகை மற்றும் இரைச்சல் காரணமாக அருகிலிருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த ராட்சத தேனீக்கள் கலைந்தன. மொத்தமாக 5க்கும் மேற்பட்ட தேன் கூடுகளிலிருந்து கலைந்த ராட்சத தேனீக்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கொட்டியது. இதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தேன்கனிகோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’