தமிழ்நாடு

மலை மாதேஷ்வரா கோயிலில் திருவிழா : ராட்சத தேனீக்கள் கொட்டியதில், 60 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அருளாளம் கிராமத்தில் உள்ள மலை மாதேஷ்வரா கோயிலில் ஊர்த்திருவிழா நடைபெற்றது.

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் அருகே அருளாளம் கிராமத்தில் உள்ள மலை மாதேஷ்வரா கோயிலில் ஊர்த்திருவிழா நடைபெற்றது. 300க்கும் மேற்பட்ட கிராமத்தினர், கலந்து கொண்டு வழிபாட்டில் ஈடுபட்டனர். அப்போது அங்கு எழுந்த புகை மற்றும் இரைச்சல் காரணமாக அருகிலிருந்த மரத்தில் கூடு கட்டியிருந்த ராட்சத தேனீக்கள் கலைந்தன. மொத்தமாக 5க்கும் மேற்பட்ட தேன் கூடுகளிலிருந்து கலைந்த ராட்சத தேனீக்கள் பொதுமக்களை துரத்தி துரத்தி கொட்டியது. இதில் 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, அவர்கள் மீட்கப்பட்டு உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் மூலம் தேன்கனிகோட்டை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.

C.Vijayabaskar Resignation ``தாய்கழகம்..திமுகவில் இணைய போகிறாரா சி.விஜயபாஸ்கர்?’’ - துரை கருணா அலசல்

BREAKING || "விஜயபாஸ்கர் ராஜினாமாவின் பின்னணி? அதிமுகவில் நடப்பது.." - உடைத்து பேசும் சுபேர்

ADMK | C.Vijayabaskar Resignation | முடிவெடுத்தார் சி.விஜயபாஸ்கர் - அதிரடியாக ராஜினாமா

Minister Sengottaiyan | TVK | அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து வழக்கு

Trichy East | CM Vijay | திருச்சி கிழக்கில்.. திடீர் திருப்பம் இனிகோ இருதயராஜ் பரபரப்பு வழக்கு