தமிழ்நாடு

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் ஒற்றை காட்டு யானை

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

ஒசூர் அருகே பொதுமக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானையை பட்டாசு வெடித்து விரட்டும் பணி நடைபெற்று வருகிறது. தேன்கனிக்கோட்டை அடுத்துள்ள மரக்கட்டா வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை காட்டுயானை கிரி நேற்று வனப்பகுதியில் பெண் ஒருவரை கொன்றது. இதையடுத்து அந்த யானையை வனத்துறையினர் பட்டாசு வெடித்து விரட்டினர். அப்போது அந்த யானை வனத்துறையினரை ஆக்ரோஷமாக தாக்க ஓடிவந்ததால் திடீரென பரபரப்பு ஏற்பட்டது. இதனைத்தொடர்ந்து 20க்கும் மேற்பட்ட வனத்துறையினர் தொடர்ந்து பட்டாசுகள் வெடித்து காட்டுயானையை விரட்டி வருகின்றனர்.

Chennai Arrest | வளைத்து வளைத்து கைது - சென்னை முழுக்க ஒருவர் விடாமல் களையெடுத்து போலீஸ் அதிரடி

அதிர்ச்சியோடு விடிந்த பிப்ரவரி 1

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..