தமிழ்நாடு

ஓசூர் : தீயில் கருகிய மூங்கில் காடு - விலங்குகள், பறவைகள் தவிப்பு...

ஓசூர் அருகே உள்ள அய்யூர் மூங்கில்காடு தீயில் கருகியதும், அதற்குள் வன விலங்குகள் உணவின்றி தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தந்தி டிவி
ஓசூர் அருகே உள்ள அய்யூர் மூங்கில்காடு தீயில் கருகியதும், அதற்குள் வன விலங்குகள் உணவின்றி தவிப்பதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோடை தொடங்கி, அக்னி வெளியில் சுட்டெரிக்கும் நிலையில், எதிர்பாராத விதமாக இரண்டாயிரத்து 789 ஹெக்டேர் பரப்பில் உள்ள அய்யூர் வனப்பகுதி தீப்பிடித்து எரிந்து நாசமானது. மூங்கில் அடர்ந்த வனப்பகுதியில் யானைகள் முதல் குரங்குகள், பறவைகள் உள்ளிட்ட சிறிய வன உயிரினங்கள் வரை உணவின்றியும், தங்கும் இடமின்றியும் தவித்து வருகின்றன. தீயில் கருகி, வெட்டவெளியாக காட்சியளிக்கும் வனப்பகுதியில், வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், குட்டிகளுடன் குரங்குகள் கடும் அவதியடைந்துள்ளன. விலங்கு மற்றும் பறவைகளை காப்பாற்ற வனப்பகுதிக்குள் தண்ணீர் வசதி ஏற்படுத்துமாறு வன ஆர்வலர்கள் கோரியுள்ளனர்.

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்

Court | TN Police | ஆகாஷ் உடலை அரசே அடக்கம் செய்ய கோர்ட் அதிரடி உத்தரவு

Govt Staffs | பழைய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரும் Plan? - வெள்ளை அறிக்கைக்கு பின் அதிமுக்கிய தகவல்

TN Govt White Paper | Minister Marie Wilson | தமிழகத்தின் உண்மையான கடன்..? ரகசியத்தை உடைத்த அமைச்சர்