தமிழ்நாடு

ஒசூரில் பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரத்துக்கு தடை விதிக்க முடியாது - உயர் நீதிமன்றம்

பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி அமமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

தந்தி டிவி

அரசு சொத்துக்கு சேதம் விளைவித்ததாக தொடரப்பட்ட வழக்கில், 3 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றதால் அமைச்சர் மற்றும் எம்எல்ஏ பதவியை இழந்த முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ண ரெட்டியின் மனைவி, ஒசூர் தொகுதியில் அதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவரது மனைவிக்கு ஆதரவாக பாலகிருஷ்ண ரெட்டி பிரசாரம் செய்ய தடை விதிக்க கோரி அமமுகவை சேர்ந்த புகழேந்தி என்பவர் சென்னை உயர் நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அதை அவசர வழக்காக விசாரிக்கவும் மனுதாரர் சார்பில் முறையிடப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திலோ, தேர்தல் நடத்தை விதிகளிலோ ஒருவரை பிரச்சாரம் செய்ய தடை விதிக்க எந்த விதிகளும் இல்லை எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்