GH | நர்ஸ் அசந்த நேரத்தில் பிரசவ வார்டில் மர்ம நபர் செய்த காரியம் - சிசிடிவியில் பதிவானது
காரைக்கால் அரசு பொது மருத்துவமனையின் பிரசவ வார்டில் பணியில் இருந்த, செவிலியரின் செல்போனை மர்ம நபர் ஒருவர் லாவகமாக திருடிச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. மேலும் அந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் மர்ம நபரை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.