தமிழ்நாடு

ஊட்டியில் குதிரை பந்தயம் : கோப்பையை தட்டிச் சென்ற ஸெண்டோஸா குதிரை

ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்க, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து சர்வதேச புகழ் பெற்ற பல குதிரைகள் ஊட்டி வந்துள்ளன. முக்கிய பந்தயமான கவர்னர் தங்க கோப்பைக்கான போட்டி நேற்று நடைபெற்றது. 12 குதிரைகள் பங்கேற்ற இப்போட்டியில் சதீஷ்குமார், பாலகுமார், விட்டல் ஆகியோருக்கு சொந்தமான ஸெண்டோஸா என்ற குதிரை தங்க கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோப்பையை வழங்கினார். இந்த குதிரைப் பந்தயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்.

TN Election Result | நாளை மறுநாள் ரிசல்ட்.. தமிழகமே பரபரக்க தீவிரமான இறுதி கட்ட ஏற்பாடுகள்

Tirupati | VIP | “ரத்து'' - திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு வெளியிட்ட அறிவிப்பு

Rent Increase | சென்னையில் வாடகை அதிகரிப்பு.. சிலிண்டர் விலை ஏற்றம் தந்த பாதிப்பு

Family | Court | "குழந்தைகளை பிரித்து வைக்க அவர்கள் ஏவுகணை அல்ல"

🔴LIVE :Thirumavalavan | VCK | election2026 | திருமா வெளியிட்ட பரபரப்பு வீடியோ