தமிழ்நாடு

ஊட்டியில் குதிரை பந்தயம் : கோப்பையை தட்டிச் சென்ற ஸெண்டோஸா குதிரை

ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி
ஊட்டியில் குளு குளு சீசனை முன்னிட்டு குதிரை பந்தயம் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் பங்கேற்க, ஐதராபாத், கொல்கத்தா, பெங்களூர் போன்ற நகரங்களிலிருந்து சர்வதேச புகழ் பெற்ற பல குதிரைகள் ஊட்டி வந்துள்ளன. முக்கிய பந்தயமான கவர்னர் தங்க கோப்பைக்கான போட்டி நேற்று நடைபெற்றது. 12 குதிரைகள் பங்கேற்ற இப்போட்டியில் சதீஷ்குமார், பாலகுமார், விட்டல் ஆகியோருக்கு சொந்தமான ஸெண்டோஸா என்ற குதிரை தங்க கோப்பையை தட்டிச் சென்றது. வெற்றி பெற்ற குதிரையின் உரிமையாளர்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கோப்பையை வழங்கினார். இந்த குதிரைப் பந்தயத்தை ஏராளமான சுற்றுலா பயணிகளும் கண்டுகளித்தனர்.

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்

Magalir Urimaithogai``மகளிர் உரிமைத்தொகை ரூ.2500?’’ - வெளியான வெள்ளை அறிக்கை.. அமைச்சரின் ரியாக்‌ஷன்