தமிழ்நாடு

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் - ஸ்டாலின்

ஆணவப் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சமத்துவபுரங்கள் மலர வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

* சமூக நீதியை நிலைநாட்டிய திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கப்பட்ட நாள் நவம்பர் 20 என்றும், இந்த கட்சியின் முன்னோடிகளை நினைவு கூற வேண்டியது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

* நல்லிணக்கம் நிலவும் அமைதிப் பூங்காவான தமிழகத்தில் சாதி வெறி அரிவாள்கள் ரத்தப் பசியுடன் அலையும் போக்கு அதிகரிப்பதை அனுமதிக்க முடியாது என்றும் சாதி வெறி தலைவிரித்தாடுவது பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

* சாதிவெறி ஆணவத்தை அகற்றும் வகையில் பெரியார் நினைவு சமத்துவபுரங்களை உருவாக்க வேண்டும் என்றும் ஸ்டாலின் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்