Hogenakkal | ஆயில் மசாஜ் செய்து கொண்டு ஆனந்த குளியல்.. ஒகேனக்கலில் குவியும் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் கடந்த சில நாட்களாக நீடித்த வெள்ளப்பெருக்கு குறைந்துள்ளதால், ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்து மகிழ்ந்து வருகிறன்றனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள தமிழக காவிரி எல்லையான ஒகேனக்கல் பிலிகுண்டுலு பகுதிக்கு வரும் நீரின் அளவு 6 ஆயிரத்து 500 கன அடியில் இருந்து, இன்று 6 ஆயிரம் கன அடியாக சரிந்துள்ளது. நான்கு நாட்கள் முழுமையாக தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், ஐந்தாவது நாளான நேற்று, சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்தும், இன்று விடுமுறை தினம் என்பதாலும், அதிக ஆர்வத்துடன் சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் ஆயில் மசாஜ் செய்து கொண்டு, பரிசல் பயணம் மேற்கொண்டு, நீர்வீழ்ச்சிகளில் குளித்து ஆனந்தமாக ஒகேனக்கலை ரசித்து வருகின்றனர்