தமிழ்நாடு

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம் : நடவடிக்கை கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்.

தந்தி டிவி

ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை ஏற்றிய விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சர் தனிப்பிரிவில் பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். ஹெச்ஐவி தொற்றுள்ள ரத்தத்தை தனக்கு ஏற்றியதாக குற்றம் சாட்டிய மாங்காட்டை சேர்ந்த பெண், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு ஒன்றை இன்று கொடுத்துள்ளார். அதில் தனக்கு ஹெச்.ஐ.வி தொற்றுள்ள ரத்தத்தை உடலில் ஏற்றிய கீழ்பாக்கம் அரசு மருத்துவமனை முதல்வர், மருத்துவர்கள், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அதனை நிரூபிக்க தயாராக இருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.

Fireaccident | பயங்கரமாய் தீ பிடித்து எரிந்த கட்டடம் - கண்ணிமைக்கும் நொடியில் கருகிய 6 உயிர்கள்

NDA | Election | தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை "இன்றே முடிவெடுக்கும் NDA.." - உடைத்து சொன்ன நயினார்

DMK || CPI || சீட்டை வாங்கிய கையோடு CPI வீரபாண்டியன் பரபரப்பு பேட்டி

TN Election | ரெடியான 750 நிர்வாகிகள்.. 2வது நாளாக களத்தில் இறங்கிய முதல்வர்

CPI | DMK | இழுபறியை முடித்து வைத்த முதல்வர்.. CPI-க்கு எத்தனை தொகுதிகள் தெரியுமா?